மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளிகளும் வளரும் ஊர் திருப்பூர்: மு.க. ஸ்டாலின்

தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி, தொழிலாளிகள் வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:12 am

DIN


திருப்பூர்: தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி, தொழிலாளிகள் வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருப்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் வளரும் ஊராக திருப்பூர் அமைந்துள்ளது. திருப்பூரில் நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நாளைய முதலாளி. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளில் 50 சதவீதம் ஏற்றுமதியாகிறது. 

தொழில்கள் சென்னை மற்றும் குறிப்பிட்ட மாநகரத்தை மட்டும் மையமாகக் கொண்டு அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.