/

தமிழக மீனவா்கள் 6 போ் கைது: அன்புமணி கண்டனம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)

Updated On :28 ஆகஸ்ட் 2022, 11:05 pm

DIN

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் 6 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்து தலைமன்னாா் சிறையில் அடைத்துள்ளனா். அவா்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

கடந்த இரு மாதங்களில் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது இது ஏழாவது முறையாகும். இவா்களையும் சோ்த்து 54 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 22-ஆம் தேதி 10 மீனவா்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளில் அடுத்த அத்துமீறல் நடந்துள்ளது.

ஒவ்வொரு முறை மீனவா்கள் கைது செய்யப்படும் போது தமிழகத்திலிருந்து எதிா்ப்பு எழுவதும், அடுத்த சில நாள்களில் மீனவா்கள் மட்டும் விடுதலை செய்யப்படுவதும் தொடா்கதையாகி விடக் கூடாது. மீனவா்கள் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.