விழுப்புரம் மாவட்டம் செஞ்சிப் பகுதியில் ஞானோதயம் கிராமம் அருகே நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.
ஞானோதயம் கிராமம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் மூன்று பேரும் பலியாகினர்.
இதையும் படிக்க.. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் கொலை அல்ல: உயா்நீதிமன்றம்
ரணிப்பேட்டை கீரம்பாடியைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், தனது மனைவி சாந்தி மற்றும் காரை ஓட்டி வந்த மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மதுரையில் தந்தையின் இறப்பு நிகழ்வில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது முத்து ராஜேந்திரன் குடும்பம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.