திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image
ஆலங்குடி கடைவீதியில் எழுந்தருளிய விஸ்வரூப விநாயகர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 10:12 am

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் எழுந்தருளியுள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞா கணபதி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆக்ஞாகணபதி.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆக்ஞாகணபதி.

இதேபோல் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள சதுர்வேத விநாயகர், காசிவிசுவநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர், சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள தும்பிக்கையாழ்வார், கீழத்தெரு முருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர், மேலராஜவீதியில் எழுந்தருளியுள்ள விநாயகர், வெண்ணாற்றங்கரை, கோரையாற்றங்கரை விநாயகர், லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் கோயிலிலிருந்து தமிழ் இளைஞர் பக்தர் கழகம் சார்பில் 29-ம் ஆண்டு விசுவரூப விநாயகர் ஊர்வலம் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம் போலீசார் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.