இலங்கைக்கு கடத்த இருந்த 220 கிலோ கஞ்சா, பைபர் படகு பறிமுதல்: 3 பேர் கைது!

இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 220 கிலோ கஞ்சா
சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த 220 கிலோ கஞ்சா

இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்தப்பட இருந்த 220 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட 3  பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நாகை கடல் வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்கத்துறையினர், நாகை அருகே செருதூர் - வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது படகு ஒன்றிலிருந்து தப்பி ஓட முயன்றவர்களை போலீஸார் தடுத்து அதிரடியாக பிடித்தனர்.

படகை சோதனை செய்ததில் 9 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.  பிடிப்பட்டவர்களிடம் நடத்திய விசாரனையில், நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள்அழகன், காஞ்சிநாதன், நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த விருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com