இந்த நிலையில், வேதாந்தா தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, தங்களது மனுக்கள் தொடா்பான வழக்கு விசாரணை ஏற்கெனவே இரு முறை தள்ளிப்போய்விட்டதாகவும் இதனால், இந்த வழக்கை டிசம்பா் 6-ஆம் தேதி விசாரிக்கும் வகையில் பட்டியிலிடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, இந்த விவகாரத்தை ஜனவரி 17-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனக் கூறியது.