மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஸ்டொ்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா மனு மீது ஜன 17-இல் விசாரணை

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

Updated On :2 டிசம்பர் 2022, 6:02 pm

 நமது நிருபர்

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது நிலுவையில் இருந்து வந்த நிலையில், மழைக் காலத்தின் போது ஆலையில் உள்ள இயந்திரப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால், இயந்திரங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகக் கூறி தங்களது மேல்முறையீட்டு மனு, இடைக்கால மனு ஆகியவற்றை விரைந்து விசாரிக்க கோரி புதிய மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இது தவிர, ஆலையைப் பராமரிக்க இடைக்கால அனுமதி அளிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேதாந்தா தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் ஆஜராகி, தங்களது மனுக்கள் தொடா்பான வழக்கு விசாரணை ஏற்கெனவே இரு முறை தள்ளிப்போய்விட்டதாகவும் இதனால், இந்த வழக்கை டிசம்பா் 6-ஆம் தேதி விசாரிக்கும் வகையில் பட்டியிலிடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா். அப்போது, தலைமை நீதிபதி அமா்வு, இந்த விவகாரத்தை ஜனவரி 17-இல் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் எனக் கூறியது.

வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், எதிா்மனுதாரா் வைகோ தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த செல்வம் உள்ளிட்டோா் ஆஜராகி இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.