இந்த வழக்கை உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில், 2021-22-ஆம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவா்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, ‘ தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், இதுகுறித்து உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசின் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழகம் அல்லது மனுதாரா் விளக்கம் பெற 10 நாள்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பா் ஸ்பெஷாலிடி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்திவைக்குமாறும் நவம்பா் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.