ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளாங்குறிச்சி ஸ்ரீ காலபைரவர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!

அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவில் ஸ்ரீ நவகிரகங்கள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2022, 7:51 am

DIN

கோவை, விளாங்குறிச்சி வெங்கடாஜலபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் மற்றும் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவில் ஸ்ரீ நவகிரகங்கள் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை விளாங்குறிச்சி வெங்கடாஜலபதி நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக திருமணம் மற்றும் குழந்தை வரம் என கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விநாயகர்,ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் இணைந்து அதே கோவில் வளாகத்தில் புதிதாக காலபைரவர் மற்றும் நவகிரகங்கள் கோயில் கட்டபட்டு, பணிகள் முடிவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

Story image

அருள்மிகு காலபைரவர் மற்றும் நவ கிரஹங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

விழாவை முன்னிட்டு, திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து, சிறப்பு ஹோமங்களுடன் பூர்ணாஹுதி தீபாரதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, கும்பாபிஷேக இளவரசு ஹரி என்கிற சேஷாத்ரி தலைமையில், சிவ ஸ்ரீ கார்த்திகேயன், சிவஸ்ரீ ரஞ்சித் சிவம், சதீஷ் சிவம் மற்றும் அருண் சிவம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அருள்மிகு காலபைரவர் மற்றும் நவ கிரஹங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

தொடர்ந்து சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடைபெற்று மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ தலைவர்கள் தங்கராஜ் துரைசாமி மற்றும் கோயில் கமிட்டி தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பூபதி கமிட்டி உறுப்பினர்கள் கோபி கண்ணன் சந்திரசேகர் புவனேஸ்வரி வஜ்ரவேல் பக்தவச்சலம் செல்வராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.