இது குறித்து சாரங்கபாணியின் மனைவி அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து இரண்டு நாள்கள் ஆகியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் வந்து சிகிச்சை அளிக்கவில்லை எனவும் உடல்நல பாதிப்பு அதிகமாக உள்ளது என செவிலியர் இடம் தெரிவித்தால் மாத்திரை அளிக்கிறேன் அதை போடுங்கள் என அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் காவலராக பணிபுரியும் நபர் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தி விட்டு தங்களிடம் பணம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்