அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுக தலைமை பிரச்னை நீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியிலிருந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்த கோவை செல்வராஜ் புதன்கிழமை காலை திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஆதரித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.