மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மூதறிஞர் ராஜாஜியின் 144-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
பாஜக மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையிலும் மற்றும் மாவட்ட பார்வையாளர் ஏ.சி. முருகேசன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் பம்பாய் சிவக்குமார், ஐ.சரவணன், கல்லாங்காடு சரவணன், தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.