‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காஞ்சிபுரத்தில்183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின : பொதுப்பணித் துறை

காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 4:02 am

DIN

காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின.


மாண்டஸ் புயலினால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. புயல் கரையை கடந்த பின்பும் தமிழகத்தில் மழை தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 11) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 183 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

காஞ்சிபுரத்தில் 111 ஏரிகள் 75 சதவிகிதம் நிரம்பியுள்ளதாகவும், 62 ஏரிகள் 50 சதவிகிதத்துக்கும் மேலாக நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திலும் 220 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.