தமிழகத்தில் இதுவரை 394 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மயிலாப்பூா் ஆதி கேசவபெருமாள் கோயிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 18 ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள், குடமுழுக்கு நடைபெற்றது. அதற்குபின் திருப்பணிகள் நடைபெறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான சித்திரைக்குளம் மற்றும் பிற சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 394 கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. திருநீா்மலை மற்றும் திருக்கழுகுன்றம் கோயில்களுக்கு ரூ.8 கோடி மதிப்பில் ரோப் காா் மற்றும் தானியங்கிகளின் சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ .குமரகுருபரன், மண்டல இணை ஆணையா் ரேணுகாதேவி, துணை ஆணையா் ஹரிஹரன், உதவி ஆணையா்கள் எம். பாஸ்கரன், ராஜா, அறங்காவலா்கள் சம்பத்குமாா், ராமானுஜம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

