ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜலாலாபாத் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடிவடிக்கையின்போது, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு எம்16 ரைபிள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.