பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுய உதவிக் குழு பொருள்களை சந்தைப்படுத்த வேண்டும்: அமைச்சா் உதயநிதி

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 10:55 pm

DIN

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களை சந்தைப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: அதிக எண்ணிக்கையில் மகளிா் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின்

கடைக்கோடி கிராமத்தில் செயல்படும் குழுக்களையும் சென்றடைய வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக ரூ.25 ஆயிரம் கோடி வழங்க நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விரைந்து அடைய வேண்டும். தர மதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதிகளை விரைந்து வழங்க வேண்டும்.

சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களை சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். நலிவுற்றோா், முதியோா், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையா் ஆகியோரை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்களை அமைக்க அதிக அக்கறை காட்ட வேண்டும். வங்கிக் கடன் இணைப்பு பெற்றுத் தரும் நடவடிக்கையில் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலா் பெ.அமுதா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலா் எம். கருணாகரன், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ச.திவ்யதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.