திருப்பூர்: திருப்பூரில் மூதாட்டியைக் கொலை செய்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் எஸ்.வி காலனி டி.எஸ்.ஆர்.லே அவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, இவரது மனைவி சந்திராமணி(67), சந்திராமணி புதன்கிழமை அதிகாலையில் வீட்டின் முன்பக்க கேட்டைத் திறந்து வைத்து விட்டு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் சமையல் அறையில் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்திராமணியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் சந்திராமணியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் 55 வயதுடைய மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுக் கோழி இனம் அழியும் அபாயம்

பழனியில் தவெக செயல்வீரா்கள் கூட்டம்

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

