தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிப்.7ஆம் தேதி தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிப்ரவரி 7ஆம் தேதி தில்லி செல்லவுள்ளார்.


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பிப்ரவரி 7ஆம் தேதி தில்லி செல்லவுள்ளார்.
3 நாள் பயணமாக தில்லி செல்லும் அவர் 9ஆம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு நேற்று திருப்பி அனுப்பியுள்ள நிலையில் ஆளுநர் 3 நாள் பயணமாக அடுத்த வாரம் தில்லி செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தோ்வை ரத்து செய்வதற்கான காரணங்கள் தொடா்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயா் நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது. மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் தேதி வழங்கியது.
ஆனால் இந்த மசோதாவை நேற்று ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்தாா். இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...