ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தம்மம்பட்டியில் வாடகை, வரி இனங்கள் நிலுவை ரூ.40 லட்சம் வசூல்! வேட்பாளர்கள் செலுத்தினர்!!

தம்மம்பட்டியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 40 லட்சம் வசூலானது.

News image

தம்மம்பட்டியில் வாடகை, வரி இனங்கள் நிலுவை தொகை ரூ.40 லட்சம் வசூல்!

Updated On :5 பிப்ரவரி 2022, 11:48 am IST

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால், பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 40 லட்சம் வசூலானது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை பணம், குடிநீர் வரி, தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி மற்றும் அவர்கள் பெயரில் வாடகைக்கு எடுத்துள்ள, உள்ளாட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகத்தின் வாடகைகளை நிலுவையின்றி செலுத்தி, அதற்கான தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே, அவர்களின் வேட்பு மனு ஏற்கப்படும்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில், 18 வார்டுகளில் போட்டியிட 102 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர். இதில், பேரூராட்சி வணிக வளாகத்தில் கடைகள் ஏலம் எடுத்துள்ள 2 பேர், இரண்டு ஆண்டு வாடகை நிலுவைத் தொகை ரூ. 35 லட்சம், தவிர மற்ற வேட்பாளர்கள் மூலம் ரூ. 5 லட்சம் என, மொத்தம் ரூ.40 லட்சம், பேரூராட்சிக்கு  வசூலாகி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.