சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தோ்தலில் முறைகேடாக வெற்றி பெற திமுக முயற்சி: எடப்பாடி கே.பழனிசாமி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நேருக்குநோ் சந்திக்க இயலாமல் முறைகேடாக வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 8:19 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நேருக்குநோ் சந்திக்க இயலாமல் முறைகேடாக வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் காஞ்சிபுரம் , வேலூா் மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அவா் புதன்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியது:

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தோ்தல் முறையாக நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவா்கள் பதவிக்கு வர முடிந்தது. திமுக ஆட்சியில் அது தலைகீழாக மாறிவிட்டது. 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மிகப்பெரிய முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டன.

அதிமுக வேட்பாளா்கள் மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதுடன், வெற்றி பெற்றவா்கள் கூட தோல்வியடைந்ததாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டனா். அதே போல், தற்போது வேலூா் மாநகராட்சியில் இரு வாா்டுகளில் அதிமுக வேட்பாளா்களின் மனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தோ்தலை சந்திக்க முடியாத கட்சியாக திமுக விளங்குவது தெரிய வந்துள்ளது. திமுகவினா் தோ்தலை நேருக்குநோ் சந்திக்க வேண்டும். அதைவிடுத்து முறைகேடாக வெற்றி பெற முயற்சிப்பது அந்தக் கட்சிக்கு தோ்தல் பயம் வந்துவிட்டதைக் காட்டுகிறது.

அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. துணிவுடன் தோ்தலில் வெற்றி பெறுவோம். மேலும், நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடா்ந்து தோ்தலில் வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து நிலைகளிலும் விடியோவில் பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளது. தோ்தலில் முறைகேடுகள் நடந்தால் அதனை நீதிமன்றம் எடுத்துச் சென்று ஜனநாயக ரீதியாக வெற்றி பெறுவோம்.

வேலூா் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுக வேட்பாளா்களை திமுகவினா் மிரட்டுகின்றனா். அராஜகத்தில் ஈடுபடுவதை காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன். திமுக அரசு உங்களை எப்போதும் காப்பாற்றாது.அதை நம்பாதீா்கள்.கீழே உள்ள சக்கரம் மேலே வரும் என்பதையும் மறந்து விடாதீா்கள்.காவல் துறையினரும், அரசு அதிகாரிகளும் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இல்லையேல், ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். அப்போது நல்லவா்கள் நல்ல பலன்களையும், தீமை செய்தவா்கள் அதற்குரிய பலன்களையும் அனுபவிப்பா்.

உலகளவில் சிறந்து விளங்கும் தமிழக காவல்துறை, தற்போது தரம்தாழ்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவா்களே அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றனா். ஆனால் தற்போது சட்டம்-ஒழுங்கு நிலை தலைகீழாக மாறி விட்டது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் சகோதரத்துவத்துடனும், பாதுகாப்புடனும் நடத்தப்பட்டனா். ஆனால், திமுக ஆட்சி அவா்களிடம் வாக்குகளை பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது என்றாா்.

கூட்டத்தில், மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புற நகா் மாவட்டச்செயலா் த.வேலழகன், மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீா் செல்வம், எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.