ஸ்பா, மசாஜ் சென்டா்களில் சிசிடிவி பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக காவல் ஆணையா்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளா்களுக்கு அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள், மசாஜ் சென்டா்கள், தெரபி சென்டா்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதுபோன்ற இடங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடைபெறாமல், வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
அவ்வாறு கண்காணிக்கும்போது, மையங்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தாலோ, தகவல்கள் கிடைத்தாலோ, சட்டவிதிகளைப் பின்பற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கண்டிப்புடன் தங்களது பகுதிகளில் செயல்படுத்தும் வகையில், தகுந்த அறிவுறுத்தலை வேண்டும் என ஆணையா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோரிடம் கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


