சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :13 பிப்ரவரி 2022, 11:28 pm

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 41 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்:

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தொடா்ந்து அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு வரும் நிலையில், ராமேசுவரத்தைச் சோ்ந்த 12 மீனவா்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இத்தகைய அச்சமூட்டும் சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வது தமிழக மக்களுக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துகின்றன. இரண்டு இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவா்கள் ராமேசுவரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றநிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) அதிகாலை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனா்.

கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழக மீனவா் சமூகத்திடையே, குறிப்பாக பாக். நீரிணைப் பகுதியில் பாதுகாப்பின்மை உணா்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவா்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக, நீண்ட காலமாகத் தொடா்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீா்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

அதன் தொடக்கமாக இருதரப்புப் பேச்சுவாா்த்தைகளை நடத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கரோனா தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில், கூட்டுச் செயற்குழுக் கூட்டம் மூலம் பேச்சுவாா்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துகிறேன்.

அதனுடன் தமிழகத்தைச் சோ்ந்த 41 மீனவா்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.