மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை காலை காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

News image
ராஜேந்திர பாலாஜி
Updated On :15 பிப்ரவரி 2022, 6:21 am

DIN

ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்  கே.டி.ராஜேந்திர பாலாஜி விசாரணைக்காக இன்று  இரண்டாவது முறையாக இன்று ஆஜர் ஆனார்.

ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது மற்றும் அவரது உதவியாளர்கள் மீது அ.இ.அ.திமு.க.முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 15.11.2021-ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் அன்றைய தினம் அவர் தலைமறைவானார்.

8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  20 நாட்களாக தேடி வந்த நிலையில்  கடந்த ஜனவரி 5 ம்தேதி  கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கே.டி.ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் உச்சநீதிமன்ற ஜாமீனில் வெளி வந்துள் ளார். இந்நிலையில் பிப்., 12 இல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இச்சூழலில் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில்  முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இரண்டாவது முறையாக ஆஜரானார்.

அவரிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன்,காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.