முதல்வர் ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழா: ராகுல் காந்தி பங்கேற்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தின் முதல் பாகம் வருகிற பிப்.28 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியாக உள்ள நிலையில் அந்த வெளியீட்டு விழாவில் சில முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தற்போது, இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட வேறு சில கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com