தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோவை விட மேற்குத் தொடர்ச்சி மலைகளே முக்கியம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு பதில் மனு அளித்துள்ளது.
மேலும், மலைகளின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி அளிக்காது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.