
எடப்பாடி அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்
எடப்பாடி அடுத்த மோளப்பாறை வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது, இதையடுத்து அந்த வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட 29 ஆவது வார்டு பகுதியில், தள்ளாத வயதிலும் யாருடைய துணையும் இல்லாமல் வாக்களிக்க வந்த 90 வயதான தம்பதிகள் காவேரி, பாப்பா.
எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட 13 ஆவது வார்டுக்கு உள்பட்ட மோளப்பாறை வாக்குப்பதிவு மையத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது, இதையடுத்து அந்த வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆணையத்தின் முன் வாக்களிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மேட்டூரில் களைகட்டியது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






