வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த பிறந்த ஊரான முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வெள்ளக்கோவில் நகராட்சி, முத்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
முத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பிறந்த ஊர் காங்கயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்தூராகும். இவர் முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் பேரூராட்சி ஒருசில வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டு கள நிலவரங்களைக் கண்டறிந்தார்.
இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஆளும் கட்சி திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க | திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 12% வாக்குகள் பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா உடன் நீடிக்கும் போர்! ஈரானில் இறுதித் தேர்வுகள் ரத்து!

விஜய் சார கேட்டதா சொல்லவும்? சிட்னியில் த்ரிஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலகலப்பு!

விக்ரம்-1 சாதனை: இந்தியாவுக்குப் பெருமை - பிரதமர் மோடி!

பனப்பாக்கம் சிப்காட் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தில் அமைச்சா் வி.காந்திராஜ் ஆய்வு
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



