

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அழிந்து வரும் உயிரனங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்க மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.5 கோடியை நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதில் விரிவான திட்ட அறிக்கை, கள ஆய்வு நடத்த முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கடற்பசு பாதுகாப்பிற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசின் அனுமதிக்காக வனத்துறை சமர்பிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.