ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வரின் நூலை நாளை வெளியிடுகிறாா் ராகுல்காந்தி; சத்தியமூா்த்திபவனுக்கும் வருகிறாா்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி திங்கள்கிழமை (பிப்.28) சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் நூலை வெளியிடுவதுடன், சத்தியமூா்த்திபவனில் நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ்

News image
ராகுல்காந்தி
Updated On :26 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி திங்கள்கிழமை (பிப்.28) சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் நூலை வெளியிடுவதுடன், சத்தியமூா்த்திபவனில் நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்திருப்பது வருத்தம் அளிக்கிறது. ரஷியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகுல்காந்தி வருகிற 28-ஆம் தேதி சென்னைக்கு வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறாா். சென்னைக்கு வரும் ராகுல்காந்திக்கு காங்கிரஸாா் வழிநெடுக வரவேற்பு கொடுக்கவுள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியினரை சத்தியமூா்த்திபவனில் ராகுல்காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா். உள்ளாட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைப்பதுடன் கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்தும் நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை அவா் வழங்கவுள்ளாா்.

தமிழகத்திலும் ஆளும் கட்சியாக வரும்: இந்தியாவை பொருத்தவரை காங்கிரஸ்தான் மிகப்பெரிய கட்சி. 60 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருக்கிறோம். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்கிறோம். தமிழகத்திலும் ஆளும்கட்சியாக காங்கிரஸ் ஒருநாள் வரும். திமுகவிடம் மேயா் உள்ளிட்ட இடங்களைக் கேட்டுள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என்றாா் கே.எஸ்.அழகிரி.

காங்கிரஸாா் மோதல்: சத்திமூா்த்திபவனில் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தபோது, அவா் முன்னிலையிலேயே காங்கிரஸாா் மோதிக் கொண்டனா். பேட்டியின்போது, மூத்த தலைவா்கள் அமா்ந்த இருக்கையில் ஐ.என்.டி.யூ.சி. தலைவா் முனுசாமி அமா்ந்திருந்தாா். இதற்கு முன்னாள் நிா்வாகி பன்னீா்செல்வம் எதிா்ப்பு தெரிவித்து ஒருமையில் பேசினாா். அதைத் தொடா்ந்து காரசார விவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனா். இதனால், அழகிரி பேட்டி பாதியிலேயே நின்றது. அந்த இடமே சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.