தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கொலை வழக்கு மற்றும் சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதில், சாலை மறியல் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் கொலை வழக்கில் சென்னைப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.
தொடர்ந்து, தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் இன்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வைஷ்ணவி மார்ச் 11-ம் தேதி வரை ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மூன்றாவது வழக்கிலும் கைது