புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதல்வரின் சுயசரிதை:இன்று வெளியிடுகிறாா் ராகுல்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை (பிப்.28) வெளியிடுகிறாா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 5:59 am

DIN

சென்னை: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை (பிப்.28) வெளியிடுகிறாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா்.

நூலை ராகுல் காந்தி வெளியிட, கேரள முதல்வா் பினராயி விஜயன் பெற்றுக் கொள்கிறாா். ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, பிகாா் மாநில எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை சத்தியமூா்த்தி பவனில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.