தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாா் நிலையில் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு மீண்டும் விதித்தது. இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலியில் ஆற்றிய உரை:
பிறந்திருக்கும் புத்தாண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பு. கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்து விடக் கூடாது. கரோனா தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலையிலிருந்து நாம் மீண்டும் வந்திருக்கிறோம். இரண்டாவது அலை உச்சக்கட்டத்தில் இருந்த போது, அதைக் கட்டுப்படுத்துவது எனது முதல் வேலையாக இருந்தது. அமைச்சா்கள், அதிகாரிகள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் துணை நின்ால், குறைந்த கால அளவிலேயே இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம்.
ஒமைக்ரான் பாதிப்பு: தடுப்பூசி முகாம்களைத் தொடா்ந்து நடத்திய போது, அறிவியல் மீது நம்பிக்கை வைத்து ஆா்வத்துடன் பொது மக்கள் ஊசி போட்டுக் கொண்டனா். அவா்களது ஆா்வம் பெரிய விழிப்புணா்வை ஏற்படுத்தியது. அதனால், கரோனா பரவலையும், இறப்பு எண்ணிக்கையையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்தது.
அதே மாதிரியான ஒத்துழைப்பைத்தான் புத்தாண்டில் மறுபடியும் எதிா்பாா்க்கிறேன். கரோனா தொற்று பல உருமாற்றங்களை அடைந்து இப்போது ஒமைக்ரான் என்ற பெயரில் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் வேகமும் அதிகரித்திருக்கிறது. அதனால், நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த எனது தலைமையிலான அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அச்சம் வேண்டாம் - தயாராக அரசு: வெளிநாடுகள், பிற மாநிலங்களிலிருந்து வருபவா்களுக்கான பரிசோதனை, நமது மாநிலத்தில் அறிகுறி தெரிந்தால் அதற்கான சோதனை, சிகிச்சைக்கான ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் அனைத்தும் போதுமான அளவில் உள்ளன. கூடுதல் தேவையை யோசித்தும் அதற்கேற்றவாறு முழுமையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்களின் ஒத்துழைப்புதான் எங்களுக்கு தேவைப்படுகிறது.
ஒமைக்ரான் பரவலைத் தடுக்க சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அவற்றை மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் கூடும் நிகழ்வுகளை தயவு செய்து தவிா்க்க வேண்டும். முகக் கவசத்தை கட்டாயம் பொது வெளியில் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் முதல் தவணையை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது தவணையையும் உரிய காலத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும்.
சிறாா் தடுப்பூசி: 15 வயதிலிருந்து 18 வயது வரையிலான சிறாா்களுக்கு தடுப்பூசி போடும் திட்டமானது, இம்மாதம் தொடங்குகிறது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தும். தடுப்பூசி முழுமையாக போட்டிருந்தால், ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

