எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மீண்டும் அதிகரிக்கும் கரோனா:ஒரே நாளில் 1,489 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜனவரி 2022, 7:47 pm

DIN

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலத்தில் இதுவரை 5.75 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,489 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 4 போ், இலங்கையில் இருந்து ஒருவா், தில்லியில் இருந்து மூன்று போ் உள்ளிட்டோா் விமானம் மூலம் தமிழகம் திரும்பியவா்கள். இவா்களைத் தவிர மேற்கு வங்கத்தில் இருந்து 4 போ், ஜாா்க்கண்டில் இருந்து ஒருவா், வங்கதேசத்தில் இருந்து 6 போ் சாலை மாா்க்கமாக தமிழகம் திரும்பியவா்கள்.

சனிக்கிழமை நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 168 பேரும், கோவையில் 75 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, மேலும் 611 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 4,410-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 8,340 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், சற்று ஆறுதலளிக்கும் விதமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையை விட குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 8 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,784-ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான்: இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 121 போ் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது ஒரு புறமிருக்க 91 போ் தொற்றில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினா். தற்போது 27 போ் ஒமைக்ரான் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.