பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை வடிவ மர்மப்பொருள்: காவல்துறை விசாரணை

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப்பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image

கடலில் மிதந்து கரை சேர்க்கப்பட்ட உருளை

Updated On :3 ஜனவரி 2022, 12:39 pm

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் படகில் இன்று (ஜன. 3) கரைக்கு கொண்டு வரப்பட்ட உருளை (சிலிண்டர்) வடிவ மர்மப்பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வானவன்மாதேவி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட கண்ணாடியிழையால் ஆன உருளை வடிவமுள்ள இந்த பொருள் 10 அடி உயரம், 3 அடி விட்டம், 9, 1/2 அடி சுற்றளவு 9 1/2 அடி இருந்தது. தகவல் அறிந்த கீழையூர் கடற்கரை காவல் நிலைய போலீசார் விசாரித்தனர்.

Story image

பின்னர், நாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட உதவி ஆய்வாளர் தமிழ்மணி தலைமையிலான மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் பொருளை பரிசோதனை செய்து, அது வெடிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.