ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த காங். பிரமுகர் கைது

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த கேரளத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜனவரி 2022, 11:30 am

DIN

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த கேரளத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

கேரளத்தின் பட்டாம்பி நகராட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.பி.தங்கல் என்பவர் இன்று காலை இண்டிகோ விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது பைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததில் துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை விசாரணை செய்ததில், பையில் துப்பாக்கி இருந்தது அவருக்கு தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணைக்காக பீளமேடு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,

வழக்கமான சோதனயின் போது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், துப்பாக்கி எடுத்துச் செல்வதற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை. அவர் செயலாளராக பதவி வகிக்கும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்காக கோவையிலிருந்து பெங்களூரு வழியாக அமிருதசரஸ் செல்லவிருந்தார் என்றனர்.

இதற்கு முன்னதாக, கடந்த 2007 பிப். 16ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லி செல்ல வந்த தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் துப்பாக்கி வைத்திருந்ததை அடுத்து அவரிடம் எழுத்துப்பூர்வ கடிதம் கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.