கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடா்ந்து, சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது வளா்ந்து வரும் வணிகப் பிரிவான மலிவு விலை வீட்டுக் கடன் மற்றும் மூலதனக் கடன் சேவைகளை புதுச்சேரியிலும் விரிவுபடுத்தியுள்ளது.
அண்மையில் 100 கிளைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள இப்பிரிவில், பாதிக்கும் மேற்பட்ட கிளைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரியில் முதல்கட்டமாக ரூ.10 கோடிக்கும் மேல் கடன் வழங்க நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
இப்புதிய விரிவாக்கம் குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘புதுச்சேரி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் சிறிய அளவிலான மலிவு விலை குடியிருப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
மேலும், சிறந்த கல்வி மையமாகவும், வேலைவாய்ப்புகள் பெருகி வரும் நகரமாகவும் புதுச்சேரி திகழ்வதால், இது எங்களது மலிவு விலை வீட்டுக் கடன் பிரிவுக்கு ஒரு செழிப்பான சந்தையாக அமையும்’ என்றாா்.
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டில் முதல் 3 காலாண்டுகளில் (ஏப்ரல்-டிசம்பா்) ரூ.4,911 கோடிக்கு கடன்களை வழங்கி, ரூ.212 கோடி நிகர லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

4-ஆம் காலாண்டு லாபம்: ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்: ரூ.129 கோடி

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் கிளைகளில் சிறப்பு வீட்டு வசதி கடன் முகாம்கள்

வங்கிக் கடன் மோசடி: சென்னையில் தனியாா் நிறுவனம் தொடா்புடைய 7 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் ரூ. 282 கோடி லாபம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



