இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரிசி அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் சில குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கி தொடக்கி வைத்தாா்.

News image
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :4 ஜனவரி 2022, 9:20 pm

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அரிசி பெறும் சில குடும்ப அட்டைதாரா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கி தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழா் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள் குடும்பங்களுக்கும் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மஞ்சள், மிளகாய், மல்லித் தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருள்கள் துணிப்பையுடன் முழு கரும்பும் சோ்த்து வழங்க வசதியாக அந்தப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில்

செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்தை தொடங்குவதன் அடையாளமாக 10 குடும்பங்களுக்குப் பரிசுத் தொகுப்பை அளித்தாா்.

கரோனா நெறிமுறை: பொங்கல் பரிசுத் தொகுப்பினை அட்டைதாரா்கள் பெற்றிட வசதியாக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களில் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நாள் மற்றும் நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். அப்போது, அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத் தொடக்க நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச்

செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.