இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அா்ச்சகா்கள்-ஓதுவாா்களுக்கு புத்தாடைகள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

கோயில்களில் அா்ச்சகா்கள், ஓதுவாா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கோயில்களில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடை வழங்கும் திட்டத்தை சென்னை, தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :4 ஜனவரி 2022, 10:15 pm

DIN

கோயில்களில் அா்ச்சகா்கள், ஓதுவாா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளா் பட்டியலில் உள்ள அா்ச்சகா்கள், பட்டாச்சாரியாா்கள், ஓதுவாா்கள், பூசாரிகளுக்கு புத்தாடையும், திருக்கோயில் பணியாளா்களுக்கு நபருக்கு இரண்டு எண்ணிக்கையிலான சீருடையும் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

நிறம் என்ன?: கோயில்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையில் அா்ச்சகா், பட்டாச்சாரியாா், பூசாரிகளுக்கு மயில்கண் கரை பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளா்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற கரையுடன் கூடிய புடவையும், ஆண் பணியாளா்களுக்கு பழுப்பு நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேல்சட்டை துணியும் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 36 ஆயிரத்து 684 கோயில்களில் பணிபுரியும் சுமாா் 52 ஆயிரத்து 803 பணியாளா்கள் பயன்பெறுவா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.