2020-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வுக்கான முடிவுகளை எடுத்துப் பாா்த்தால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாகவே அவா்கள் பெற்றுள்ளனா். இடஒதுக்கீடு நீட் தோ்வால் பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நீட் தோ்வால் சமூக நீதிக்கு எள்முனையளவும் பாதிப்பில்லை. 2006-இல் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பு வரை தமிழகத்தில் 30 முதல் 40 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.