வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சரியத் தொடங்கியது மேட்டூர் அணையின் நீர்மட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் கடந்த 31ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டு இருந்தது

News image
(கோப்புப்படம்)
Updated On :11 ஜனவரி 2022, 7:09 am

DIN

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்த காரணத்தால் கடந்த 31ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டு இருந்தது.

தற்பொழுது டெல்டா பாசன பகுதிகளில் மழை இல்லாததால் பாசன தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை முதல் வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.59 அடியிலிருந்து 116.21 அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 2390 கன அடியிலிருந்து 2060 கன அடியாக குறைந்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 87.55 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.