தூத்துக்குடியில் களைகட்டிய மாட்டுப்பொங்கல்
தூத்துக்குடியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகள் மற்றும் கோசாலைகளில் வளர்க்கப்படும் மாடுகளை குளிப்பாட்டி, மாலை, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.


தூத்துக்குடியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகள் மற்றும் கோசாலைகளில் வளர்க்கப்படும் மாடுகளை குளிப்பாட்டி, மாலை, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
உழவர்களின் நண்பன் என்று போற்றப்படும் மாடுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொங்களுக்கு அடுத்த நாளை மாட்டுப் பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.
இதையும் படிக்க.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பள்ளிச் செல்லும் அவதார் ரோபோ
அந்தவகையில் தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் கோசாலைகலில் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் மாடுகளை காலையிலே குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாலை அணிவித்து வஸ்திரம் சாத்தி அழகுபடுத்தி மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
பின்னர் பொங்கலிட்டும் மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...