மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி கைது ஏன்?

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி-யை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

News image
முன்னாள் அமைச்சர் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது
Updated On :16 ஜனவரி 2022, 6:51 am

DIN

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி-யை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவர்  தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளர் பதவி வாங்கித் தருவதற்காக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் தம்பியும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய முன்னாள் நிர்வாகியுமான விஜய நல்ல தம்பியிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் குற்றப்பிரிவு காவலர்கள் விஜயநல்லதம்பியிடம் விசாரணை செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கடந்த 15.11.2021-ம் தேதியன்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன் மற்றும் முத்துப் பாண்டி ஆகியோர் மீது  ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக 3 கோடி வரை  மோசடி செய்ததாக  விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு வார பிணையில் முன்னாள் அமைச்சர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இச்சூழலில் ரவீந்திரன் புகாரின் அடிப்படையில் விஜய நல்ல தம்பியை(55), கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளத்தில் தனிப்படை காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.