கெங்கவல்லி, செந்தாரப்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

கெங்கவல்லியில், எம் ஜி ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  இதற்கு கெங்கவல்லி நகர அதிமுக செயலாளர் ஆர். இளவரசு தலைமை வகித்தார்.
கெங்கவல்லியில்  நடந்த விழா
கெங்கவல்லியில் நடந்த விழா
Updated on
1 min read

தம்மம்பட்டி: கெங்கவல்லியில், எம் ஜி ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  இதற்கு கெங்கவல்லி நகர அதிமுக செயலாளர் ஆர். இளவரசு தலைமை வகித்தார்.

கெங்கவல்லி கிழக்கு  ஒன்றிய அதிமுக செயலாளர் வா.ராஜா முன்னிலை வகித்தார். கணவாய்காடு கடைவீதி தாலுகா அலுவலகம் அருகில் கொடியேற்றப்பட்டன. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும், படங்களுக்கும் எம்எல்ஏ நல்லதம்பி  மாலை அணிவித்தார்.  

கெங்கவல்லி நகர அதிமுக  சார்பாக 700 பேருக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  முன்னாள் ஒன்றிய  நிர்வாகிகள் கருப்பையா, மருதமுத்து, கெங்கவல்லி பேரூராட்சி முன்னாள் நிர்வாகி சுந்தர்ராஜன் மற்றும் கைலாச கன்னி கோவிந்தராஜன் நகர அவைத்தலைவர் அங்கமுத்து, மாவட்ட பிரதிநிதி முருகேசன், நகர அம்மா பேரவை செயலாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                  

செந்தாரப்பட்டி 

செந்தாரப்பட்டியில்
செந்தாரப்பட்டியில்


செந்தாரப்பட்டியில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை. ரமேஷ் தலைமை வகித்து எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் மாணிக்கம், அக்பர், சுரேஷ், மாலிகுணா, வார்டு செயலாளர்கள் ராஜா, பொன்னுசாமி, ரமேஷ், மகளிரணி ராஜாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com