தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மறைமலைநகர் அருகே 2 மகள்களுடன் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :19 ஜனவரி 2022, 10:50 am

DIN


 
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே குடும்ப தகராறில் தந்தை தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மறைமலைநகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் பிரேதமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல்(44) இவர் மனைவி ஜெயந்தி (38) இவர்களுக்கு ஐஸ்வர்யா( 5) பூஜா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் குடும்ப தகராறில் ஞானவேல் கடந்த ஜனவரி 15ந் தேதி தனது இருமகள்களுடன் ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில்  ஜனவரி 18ந் தேதி செவ்வாய்க்கிழமை தனது கணவர் குழந்தைகளுடன் சென்றவர் காணவில்லை எனப்  புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் கடம்பூர் எனும் கிராமத்தில் விவசாயக் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும் அருகில் சென்று பார்த்தபோது அங்குள்ள விவசாய தரை கிணற்றில் இறந்த நிலையில் 2 சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல்  தெரிவித்தனர். 

தகவலையடுத்து மறைமலைநகர் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் எழும்பூரில் காணாமல் போன ஞானவேல் என்பதும் சிறுமிகள் இவரது இரண்டு மகள்கள் என்பதும் தெரியவந்தது.

தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்த நிலையில் குடும்ப பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.