வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரவாக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததைக் கண்டித்து சாலை மறியல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்காததைக் கண்டித்து விவசாயிகள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பரவாக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
Updated On :19 ஜனவரி 2022, 8:31 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்காததைக் கண்டித்து விவசாயிகள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பரவாக்கோட்டையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டு தற்போது முழுவீச்சில் அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது.தங்களில் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, பரவாக்கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்வார்கள்.

ஆனால், தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், பரவாக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யமுடியாத நிலை உள்ளது. அருகில் உள்ள பகுதியில் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் நடைபெற்று வரும் நிலையில் பரவாக்கோட்டையில் மட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், புதன்கிழமை பரவாக்கோட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளுடன் சென்ற விவசாயிகள் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் பூட்டியிருந்ததை அடுத்து, பரவாக்கோட்டையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் பால்ஜேக்கப் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் விளக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், 30 நிமிடம் போக்குவரத்து தடைப்பட்டது.

தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மன்னார்குடியில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து, புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.