மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

'மானாமதுரை ஆண்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை'

மானாமதுரையில் ஆண்டிகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தமிழரசன் புதன்கிழமை தெரிவித்தார். 

News image
மானாமதுரை ஆண்டிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் வருவாய்த்துறையினர் புலத்தணிக்கை செய்தனர்
Updated On :26 ஜனவரி 2022, 10:20 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆண்டிகுளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தமிழரசன் புதன்கிழமை தெரிவித்தார். 

மானாமதுரையில் கன்னார்தெரு பகுதியில் உள்ள ஆண்டிகுளம் கண்மாய் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை வருவாய் வட்டாட்சியர் தமிழரசன் மேற்கண்ட பகுதிக்கு சென்று நில அளவையாளர் மற்றும் வருவாய்துறையினருடன் ஆய்வு செய்து புல தணிக்கை மேற்கொண்டார். 

அப்போது ஆண்டிகுளம் கண்மாய் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல இடங்களில் சிறிய வீடுகள் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண்டிகுளம் கண்மாய்  முழுவதுமாக நில அளவீடு செய்யப்பட்டு இங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.