தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது இந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.