நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டிலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டிலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறவுள்ளன. வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டிலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com