ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ட்விட்டர் பக்கத்தில் பொறுப்பை மாற்றிய இபிஎஸ்! என்ன தெரியுமா?

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில், தனது பொறுப்பை 'தலைமையகச் செயலாளர்' என மாற்றியுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:40 am

DIN

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில், தனது பொறுப்பை 'தலைமையகச் செயலாளர்' என மாற்றியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்து வரும் அதே நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதலும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். 

அதற்கு நேற்று பதில் கடிதம் அனுப்பிய எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாகவும் உங்களின்(ஓபிஎஸ்) கடிதம் செல்லத்தக்கது அல்ல என்றும் குறிப்பிட்டார். 

Story image

இந்த சூழ்நிலையில்  எடப்பாடி கே பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சுய விவரக் குறிப்பில் 'அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்' என்ற 
பொறுப்பை 'தலைமையகச் செயலாளர்' என மாற்றியுள்ளார். 

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியானதால் அவர் பொறுப்பை மாற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

மேலும் முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தபோது, எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகச் செயலாளராகவும் ஓ.பன்னீர் செல்வம் பொருளாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.