47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ரயான் துணி உற்பத்தி செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு வார கால  உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :3 ஜூலை 2022, 7:44 am

DIN

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ரயான் துணி உற்பத்தி செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு வார கால  உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு,  லக்காபுரம்,  சித்தோடு போன்ற பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம்  ரயான் துணி வகை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக  ரயான் நூல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் உற்பத்தி செய்யப்படும்  ரயான் துணிக்கு 120 கிராமிற்கு இரண்டு ரூபாய் நஷ்டம் அடைவதாலும் ரயான் உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.