ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதனை படைத்த உண்டியல் காணிக்கை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நேற்று ஒரே நாளில் பக்தர்கள் உண்டியலில் இட்ட காணிக்கைத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.18 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

News image
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதனை படைத்த உண்டியல் காணிக்கை
Updated On :5 ஜூலை 2022, 6:22 am

DIN

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நேற்று ஒரே நாளில் பக்தர்கள் உண்டியலில் இட்ட காணிக்கைத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.18 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கோயில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

வார இறுதி நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் நிலையில், திங்கள்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கை 6.18 கோடி ரூபாய் வந்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திங்கள்கிழமையன்று, கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி வந்துள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு அனைத்து சேவைகளும் தொடங்கிய நாளிலிருந்து முதல் முறையாக இந்த அளவுக்கு உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக தேவஸ்தான நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்குப்பதிவு அதிகாரி பாலாஜி கூறியுள்ளார்.

இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஒருநாள் உண்டியல்  காணிக்கை ரூ.6.45 கோடி வந்துள்ளது. அதுபோல ஜூலை மாதத்திலும் ரூ.6.28 கோடி வந்துள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு முதல் முறையாக திங்களன்று உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை எட்டியுள்ளது. இது திருப்பதி திருமலை கோயில் வரலாற்றில் மூன்றாவது முறையாகும்.

வார நாள்களில் 65 ஆயிரம் பக்தர்கள் வரை கோயிலுக்கு வருகை தருகிறார்கள். வார இறுதி நாள்களில் இதுவே 80 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.